ஏற்காடு சட்டசபைத் தேர்தல்... 9ம் தேதி தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி விட்டன.
இங்கு நவம்பர் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை நவம்பர் 16ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் 18ம் தேதி பரிசீலிக்கப்படும். 20ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் 109 ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான சபாபதியிடம் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை தேமுதிக மட்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பிற கட்சிகள் திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, பாமக, மதிமுக ஆகியவை போட்டியிடவில்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் ஏற்காடு பிரசாரம் தீவிரமடையும். பிரசாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும் அங்கு குவிந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications