தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது காற்றழுத்ததாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், சென்னையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

North east monsoon begins today – MET office

நாமக்கல் மாவட்டம் திருச்ஙெ்கோடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி கொட்டாரம், தடிக்காரன்கோணத்தில் மழை பெய்து வருகிறது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பலத்தமழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.‘

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.

பெரம்பலூர் அருகே பாடாலூரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. புளிய மரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கிய தாய் மகனை மின்னல் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+