வடகிழக்குப் பருவமழை: சென்னை, நெல்லையில் அதிகம் - கோவையில் குறைவு - வெதர்மேன்
அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.
சென்னை: வட கிழக்கு பருவமழை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. வடகிழக்கில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால் குறிப்பிடும்படி மழை இல்லை பனிமூட்டம் மட்டுமே நிலவுகிறது. சென்னையில் மேக மூட்டமாக காணப்படுகிறது.
கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூரில் கொட்டித்தீர்த்தது. நவம்பர் இறுதியில் ஓகி புயலாக மாறி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சூறையாடியது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைவாகவே காணப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பருமழை முடிவு
இந்த ஆண்டுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு இனி மழைப்பொழிவு கிடையாது. ஆனால், கீழைக்காற்று வருகிற ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிக்கும்.

லேசான மழை
இந்த ஆண்டு பருவமழை போதுமானதாக இருந்தது. இதனால் சென்னையில் வருகிற 2018ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது. கீழைக்காற்று அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்வதால் லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகளவு பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 48 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது. குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 20 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது.

பாபநாசத்தில் 45 செமீ மழை
நவம்பர் 28 முதல் டிசம்பர் 2வரை ஓகி புயலால் பெய்த மழை தென்மாவட்டங்களில் அணைகளை நிறைத்துள்ளது.
தேனி, விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது.

முடிந்த மழை
இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. அணை 100 அடிக்கு மேலாக தண்ணீர் நிரம்பியது. அடுத்ததாக டிசம்பர் 5ஆம் தேதியன்று மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின்னரும் மழை அதிக அளவில் பொழியவில்லை.

மழை குறைவு
புதுக்கோட்டை 47 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 46%, கோவையில் 43% திருச்சியில் 41% ஈரோடு 36% சிவகங்கையில் 36% அளவிற்கு மழை குறைவாக பெய்துள்ளது.

அதிக அளவில் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் திருநெல்வேலி 48% நாகப்பட்டினம் 27% கன்னியாகுமரியில் 25% சென்னையில் 23% திருவண்ணாமலையில் 20% காரைக்காலில் 20% அளவிற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை முடிவு
நவம்பரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications