வடகிழக்குப் பருவமழை: சென்னை, நெல்லையில் அதிகம் - கோவையில் குறைவு - வெதர்மேன்
அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.
சென்னை: வட கிழக்கு பருவமழை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. வடகிழக்கில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால் குறிப்பிடும்படி மழை இல்லை பனிமூட்டம் மட்டுமே நிலவுகிறது. சென்னையில் மேக மூட்டமாக காணப்படுகிறது.
கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூரில் கொட்டித்தீர்த்தது. நவம்பர் இறுதியில் ஓகி புயலாக மாறி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சூறையாடியது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைவாகவே காணப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பருமழை முடிவு
இந்த ஆண்டுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு இனி மழைப்பொழிவு கிடையாது. ஆனால், கீழைக்காற்று வருகிற ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிக்கும்.

லேசான மழை
இந்த ஆண்டு பருவமழை போதுமானதாக இருந்தது. இதனால் சென்னையில் வருகிற 2018ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது. கீழைக்காற்று அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்வதால் லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகளவு பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 48 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது. குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 20 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது.

பாபநாசத்தில் 45 செமீ மழை
நவம்பர் 28 முதல் டிசம்பர் 2வரை ஓகி புயலால் பெய்த மழை தென்மாவட்டங்களில் அணைகளை நிறைத்துள்ளது.
தேனி, விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது.

முடிந்த மழை
இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. அணை 100 அடிக்கு மேலாக தண்ணீர் நிரம்பியது. அடுத்ததாக டிசம்பர் 5ஆம் தேதியன்று மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின்னரும் மழை அதிக அளவில் பொழியவில்லை.

மழை குறைவு
புதுக்கோட்டை 47 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 46%, கோவையில் 43% திருச்சியில் 41% ஈரோடு 36% சிவகங்கையில் 36% அளவிற்கு மழை குறைவாக பெய்துள்ளது.

அதிக அளவில் மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் திருநெல்வேலி 48% நாகப்பட்டினம் 27% கன்னியாகுமரியில் 25% சென்னையில் 23% திருவண்ணாமலையில் 20% காரைக்காலில் 20% அளவிற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை முடிவு
நவம்பரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications