நரசிம்மராவ் சுயசரிதையை மொழி பெயர்த்த எழுத்தாளர் என்.கோபாலகிருஷ்ணன் மரணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபலமான எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான என். கோபால கிருஷ்ணன் கேரளாவில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 80. இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கோட்டயம் இவரது சொந்த ஊராக இருந்தாலும் கோழிக்கோட்டில் நீண்ட காலமாக வசித்து வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய முதல் புத்தகம் "வாழ்வு என்ன பெருவழி" 1999 ஆம் ஆண்டு வெளியானது. "சூபி பறஞ்ச கதா" என்ற புத்தகம் ஆங்கிலத்திலிருந்து கோபலகிருஷ்ணனால்தான் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications