For Quick Alerts
For Daily Alerts
Just In
எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மாரடைப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி!!
சென்னை: எழுத்தாளர் பிரபஞ்சன் மாரடைப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கல்யாணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஆசிரியராக தஞ்சையில் வாழ்க்கையைத் தொடங்கியவர். சுமார் 50 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார்.
பிரபஞ்சனின் வானம் வசப்படும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. சென்னையிலும் புதுச்சேரியிலுமாக வசித்து வரும் பிரபஞ்சனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை கல்யாணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபஞ்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Comments
English summary
Writer Prapanchan has been admitted to a private hospital in the Chennai.
Story first published: Wednesday, November 26, 2014, 12:14 [IST]