கார்த்தி சிதம்பரம் வீட்டில் எதையும் கைப்பற்றவில்லை- அமலாக்கத் துறை
டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
சென்னை: டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு இன்று காலை 7.25 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரது மனைவி நளினியும், மருமகள் ஸ்ரீ நிதியும் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஐஎன்எக்ஸ் நிறுவன வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சோதனைகள் கிட்டதட்ட 10.30 மணிக்கும் முடிவடைந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை.
காலை 7.25 மணி முதல் 10.30 மணி வரை சோதனை நடத்தினோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.