கார்த்தி சிதம்பரம் வீட்டில் எதையும் கைப்பற்றவில்லை- அமலாக்கத் துறை
டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு இன்று காலை 7.25 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரது மனைவி நளினியும், மருமகள் ஸ்ரீ நிதியும் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஐஎன்எக்ஸ் நிறுவன வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சோதனைகள் கிட்டதட்ட 10.30 மணிக்கும் முடிவடைந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை.
காலை 7.25 மணி முதல் 10.30 மணி வரை சோதனை நடத்தினோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications