திண்டுக்கல்லில் பிரபல ரவுடி 'குட்டை பாலன்' கொலை!
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்கிற குட்டை பாலன் பிரபல ரவுடி. திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பாலன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மத்திய சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கழுத்து அறுபட்ட நிலையில் பாலன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பாலனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? எதற்காக பாலனை கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications