சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: குண்டுவெ்டிப்பு நடந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்தப் படையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது.

குண்டுவெடிப்பு நடந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகள், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பத்தில் ஸ்வாதி என்ற 22 வயது பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
கடிகாரங்கள் கண்டுபிடிப்பு
இதற்கிடையே, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் 2 கடிகாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் குண்டு வெடிக்க கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டதா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications