For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகை, சென்னை, கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காற்றழுத்தம் வலுவடைகிறது: வானிலை ஆய்வு மையம்

    சென்னை: கடலூர், நாகை, சென்னை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வான்லை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

    Number One Cyclone warning cage raised Chennai, Nagai, Cuddalore Harbours

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தெற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அதாவது இன்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திரா அருகே வலுப்பெறும் நிலையில், காற்றின் வேகம் கருதி, கடலூர், சென்னை, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    English summary
    Number One Cyclone warning cage raised Chennai, Nagai, Cuddalore Harbours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X