வன்முறை, வெறி பேச்சு.. கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு .. கைதாவாரா?
நடிகர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

அதிர்ச்சியூட்டிய கருணாஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியே தான் அடித்துவிடுவேன் என்பதால் பயந்தார் என்றும், கூவத்தூரை அடையாளம் காட்டியவனே தான் தான் என்றும் பேசி அனைவரையும் அதிர்ச்சியூட்டினார்.

கருணாஸ் விடுத்த சவால்
மேலும், காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சவால் விடுத்த கருணாஸ், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்திருந்தார். இதெல்லாம் போதாதென்று சாதி ரீதியாகவும் சில கருத்துக்களை எக்குத்தப்பாக பேசியிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு
அவரது பேச்சு ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரையே அடிப்பேன் என்ற ரீதியில் அவர் பேசியது தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கருணாஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யூ-டியூப் ஆதாரங்கள்
தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் கருணாஸ் பேசிய வீடியோ யு-டியூப்பில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications