வன்முறை, வெறி பேச்சு.. கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு .. கைதாவாரா?
நடிகர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

அதிர்ச்சியூட்டிய கருணாஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியே தான் அடித்துவிடுவேன் என்பதால் பயந்தார் என்றும், கூவத்தூரை அடையாளம் காட்டியவனே தான் தான் என்றும் பேசி அனைவரையும் அதிர்ச்சியூட்டினார்.

கருணாஸ் விடுத்த சவால்
மேலும், காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சவால் விடுத்த கருணாஸ், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்திருந்தார். இதெல்லாம் போதாதென்று சாதி ரீதியாகவும் சில கருத்துக்களை எக்குத்தப்பாக பேசியிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு
அவரது பேச்சு ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரையே அடிப்பேன் என்ற ரீதியில் அவர் பேசியது தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கருணாஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யூ-டியூப் ஆதாரங்கள்
தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் கருணாஸ் பேசிய வீடியோ யு-டியூப்பில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications