நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: அரசு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கி.பழனிச்சாமி நேற்று சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கவேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தோம்.
இதனையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன், காமராஜ் தலைமையிலான குழுவினரிடம் எங்களது சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 18 பேர் சந்தித்து பேசினோம். அரசு மற்றும் ஊழியர்கள் என இருதரப்பு பேச்சுவார்த்தை மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலான 2 மணி நேரம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் மலைப்படி, குளிர்காலப்படி, சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, மகப்பேறு விடுப்பு 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரித்தல், சில்லறை செலவினத்தை ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட ஒருசில கோரிக்கைகளை அரசு தரப்பில் ஏற்றுக்கொண்டு மீதம் உள்ள கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
ஆனால் எங்களுடைய பிரதான கோரிக்கைகளான ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் ஏற்க மறுத்துவிட்டார்கள். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. கோரிக்கையை ஏற்காததற்கு சத்துணவு ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்தானே என்று காரணம் கூறுகிறார்கள். அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
ஆகவே மீண்டும் எங்களை அழைத்து அரசு எங்களுடைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஏற்கனவே அறிவித்ததுபோன்று நாளை (புதன்கிழமை) முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் மொத்தம் 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன.
இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் எங்களது சங்கங்களை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்," என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications