"அம்மா"வை வரவேற்க நேற்றே பெங்களூர் போய்ச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவே பெங்களூர் போய் விட்டார். இன்று சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவை அவர் உற்சாகத்துடன், நெகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதும் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் 2 வது முறையாக பதவியேற்றார். ஆனால் அந்தப் பதவியை அவர் சுகமாக நினைக்கவில்லை. மாறாக பெரும் வருத்தத்துடன், வேதனையுடன் இருந்து வந்தார். சவரம் கூட செய்யாமல் தாடியுடன் வளைய வந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஜெயலலிதா சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
இதையடுத்து ஜெயலலிதாவை நேரில் வரவேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். இரவு ஒன்பதரை மணியளவில் பன்னீர் செல்வம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். இன்று சிறைக்குச் சென்று காத்திருந்து, ஜெயலலிதாவை வரவேற்று மகிழ்ந்தார்.