அப்பல்லோவுக்கு அமைச்சர் ஓ.பி.எஸ். வந்தவுடன் புறப்பட்ட தம்பி !
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை வந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 5 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், அவரின் ஆயுள் அதிகரிக்கவும் வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், மற்ற கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வந்திருந்தார். சுமார் அரை மணி நேரம் உள்ளே இருந்தார். இரவு 7 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் வந்தவுடன், ஓ.ராஜா உடனே வெளியே சென்றார்.












Click it and Unblock the Notifications