எந்த பதவியும் வேண்டாம், அதிமுகவை விட்டு விலகுகிறேன்.. சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் கடிதம்!
சசிகலாவுக்கு ஓபிஎஸ் இன்று திடீர் கடிதம் அனுப்பினாராம். அதில் எனக்கு எந்த பதவியும், வேண்டாம், நான் அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம்.
சென்னை: எனக்கு எந்த பதவியும் வேண்டாம், அதிமுகவை விட்டு விலகுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று திடீரென இரவு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளும் போற்றும் வகையில், முதல்வர் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென முதல்வர் பதவியை தியாகம் செய்ய, சசிகலா பணித்தார். இதனால் அதிருப்தியில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், சசிகலாவுக்கு ஓபிஎஸ் இன்று திடீர் கடிதம் அனுப்பினாராம். அதில் எனக்கு எந்த பதவியும், வேண்டாம், நான் அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம். இதை பார்த்ததும், போயஸ் கார்டன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications