ஆளுநர் அழைத்துதான் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்.. ஓ.எஸ்.மணியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அழைத்துதான் அவரைப் பார்க்க ராஜ்பவன் செல்கிறார் அதிமுகவின் சட்டசபை கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஓ.எஸ்.மணியன் கூறுகையில், ஆளுநர் அழைப்பின்பேரில்தான் எடப்பாடி பழனிச்சாமி ராஜ்பவன் செல்கிறார். ஆளுநர் என்ன நடவடிக்கையாக இருந்தாலும் அதை விரைந்து எடுக்க வேண்டும்.

தமிழக மக்கள், தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுநரின் முடிவு அமைய வேண்டும். தாமதம் செய்யாமல் எடப்பாடி பழனிச்சாமியை அரசமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றார் ஓ.எஸ்.மணியன்.












Click it and Unblock the Notifications