15,000 சிசிடிவி கேமராவா?: ஒபாமா திருட மாட்டாருப்பா.. "தாட் புரவோக்கிங்" ஃபேஸ்புக் கலாட்டா!
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் 15 ஆயிரம் சிசிடிவி கேமாரக்கள் பொருத்தப்படுவது பற்றி ஃபேஸ்புக், ட்விட்டரில் மக்கள் காமெடி செய்து வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். டெல்லி செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஒபாமா தான் சிறப்பு விருந்தினர். அவர் வருகையையொட்டி டெல்லியை பாதுகாப்பு கோட்டையாக மாற்றியுள்ளனர்.
ஒபாமாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த டெல்லியில் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இது குறித்து தான் மக்கள் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்கள்,
ஒபாமா வருகைக்காக டெல்லியில் 15,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
அட கிறுக்கு பயலுகளா...
அவரு அமெரிக்க ஜனாதிபதிடா...
அப்டில்லாம் எதையும் திருடிட்டு போக மாட்டாரு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.