அரசியல் பின்புலம் பார்க்காமல் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியல் பின்புலம் பார்க்காமல் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக அரசு அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம், ரெட்டை ஏரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்து நிவாரண உதவிப் பொருட்களை தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், எந்த கட்சி பின்புலத்தை கொண்டவராக இருந்தாலும், ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஏழைகளை அப்புறப்படுத்தும்போது அவர்களுக்கு தேவையான மாற்று இடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications