வெள்ளம் எதிரொலி: மேற்கு தாம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகள் இடிப்பு
சென்னை: மேற்கு தாம்பரத்தில் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இடித்து தள்ளப்பட்டன.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழைக்கு சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து. பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளித்தது. தொடர் மழையினாலும், வெள்ள நீர் வடியாத காரணத்தாலும் ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் சில பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், முடிச்சூர் வேளச்சேரி, அய்யப்பன்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில், நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததற்கு தாழ்வான பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டிருந்ததும் எனவும் முறையான வடிகால் அமைக்காததே காரணம் எனவும் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தாம்பரம், அம்பேத்கர் புதுநகரில் பாப்பன் கால்வாய் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஓடைப்புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டியதால் வெள்ளம் ஏற்பட்டதாகவும் காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமிக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகளும் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 3 மணி நேரத்தில் இடித்துத் தள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். வீடுகளை இழந்தோருக்கு மாற்று குடியிருப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications