ஓகி புயல்... குமரி நிவாரண பணிகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: தென் தமிழகத்தையே புரட்டி போட்ட ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தையே பாடாய் படுத்திவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமலும் இடுப்பு அளவு தண்ணீரிலும் மக்கள் தத்தளித்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் குறித்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பை அடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன, ஓகி புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன ஆகியன குறித்து வரும் 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications