வாசுவிடம் ரூ.20 லட்சம்.. கலர் கலராக.. கட்டுக் கட்டாக.. அத்தனையும் புது நோட்டு.. பதறி போன பரமக்குடி!
பரமக்குடி: கட்டு கட்டாக.. கலர் கலராக.. பணக்கட்டுகளை திமுகவினரிடம் இருந்து பறிமுதல் செய்திருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு போனபோதுதான் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் ராத்திரியும் பகலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் ஏராளமான பணத்தை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களையும் விசாரித்து வருகிறார்கள். ஆனால் என்னதான் கண்கொத்தி பாம்பாக பார்த்தாலும் எப்படியாவது பணப்பட்டுவாடா இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மும்முரம்
இந்நிலையில், பிரச்சாரத்துக்கு இன்றுதான் கடைசி நாள். அதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சியினர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படித்தான் பரமக்குடியில் இன்று காலை நயினார்கோவிலிருந்து பாண்டியூர் செல்லும் சாலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

டாடா சுமோ
அந்த பக்கமாக செல்லும் ஒரு வண்டியையும் விடாமல் சோதனை செய்தனர். அந்த நேரத்தில் ஒருடாடா - சுமோ வண்டி வேகமாக வந்தது. அதையும் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவருக்கு குப்பென வியர்த்து விட்டது. இதனால் அதிகாரிகள் அவரிடம் யார் என்ன என்று விசாரித்தனர். அப்போது அந்நபர், திமுக ஒன்றிய முன்னாள் நிர்வாகி வாசு என்றும், வாணிய வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தயங்கி தயங்கி வாசு பதில் சொல்லவும் காரை சோதனை போட்டனர்.

கட்டு கட்டாய்..
அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 500 ரூபாய் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் 19 லட்சத்து, 93 ஆயிரத்து, 500 அதாவது கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் வாசுவிடம் இல்லை. அதனால் டாடா சுமோ வண்டியையும், வாசுவையும் சேர்த்து பரமக்குடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல்
பணப்பட்டுவாடா என்பது திமுகவில் என்று மட்டும் இல்லை. திமுக என்றால் வெறும் 500 ரூபாய்தான்.. ஆனால் அதிமுக 1000 ரூபாயை பட்டுவாடா செய்கிறதாம். அதற்கு சமமாக அமமுகவும் அள்ளி விடுகிறதாம். ஆனால் அதிமுக தரப்பில் யாரையும் மடக்கி, சோதனையோ,விசாரணையோ நடத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications