கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகளுடன் 2 லாரிகள் தமிழக எல்லையில் மடக்கிப் பிடித்த மக்கள்!
செங்கோட்டை: கேரளாவிலிருந்து 2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை பொதுமக்கள் தமிழக எல்லைப் பகுதியில் மடக்கி பிடித்தனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் 1500க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சென்றுவருகின்றன.

தமிழகத்திலிருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பும் போது வெற்று வாகனங்களாக வரும். அப்படி வரும் வாகனங்கள் அங்கிருந்து பல்வேறு கழிவுகளை ஏற்றி தமிழகத்தின் எல்லைகளில் அவர்கள் கொண்டுவந்து கொட்டி சென்றவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் அங்குள்ளவர்கள் கழிவுகளை தமிழகத்தை நோக்கி அள்ளி அனுப்பும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்க்கு நமது தமிழக வாகன ஓட்டுனர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி இரண்டு சரக்கு லாரிகள் வேகமாக வந்தன. அதனை புளியரை எல்லையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு அதிகாரிகள் குழுவினர் மற்றும் புளியரை பொதுநல அமைப்பினர் ஆகியோர் மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரிகளில், இருந்த கழிவுகளில் இருந்து புழுக்கள் சாலையில் கொட்டுமளவுக்கு இருந்ததைக் கண்ட அதிகாரிகள், புளியரை பொதுநல அமைப்பினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த புளியரை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பவுன்.மற்றும் போலீசார் லாரியை பிடித்து உடனடியாக கேரள எல்லையில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர்.
இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக் கழிவுகளை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நலக் குழுவினரை, மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications