கொட்டிய ஆயிலை அகற்றுவது 2வது வேலைதான்.. துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சாரின் அலட்சியம்
கப்பல்கள் மோதிக்கொண்டதும் கப்பலில் உள்ளவர்களை காப்பற்றும் நோக்கத்தில் இருந்தோம் என்றும், கொட்டிய ஆயிலை அகற்றுவது இரண்டாவது வேலை என்றும் எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொடர்ந்து எண்ணெய் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றும் பணியில் முதலில் இருந்தோம் என்று எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொடங்கப்பட்டு 139 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி இருப்பது இதுதான் முதல் முறை. இந்த எண்ணெய் அகற்றும் பணியை 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. என்றாலும் இன்னும் முடிந்தபாடில்லை. வெறும் கைகளாலும், வாளிகளாலுமே எண்ணெய் அகற்றப்படுவதால் இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று துறைமுக தலைவரிடம் விசாரித்தால் பதில் ஒன்றும் இல்லை. மாறாக கப்பல் விபத்தில் மனிதர்களுக்கு எந்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்தினோம் என்றும், எண்ணெய் கொட்டியதை அகற்றுவது இரண்டாவது வேலைதான் என்றும் பாஸ்கர் ஆச்சார் கூறினார்.
பொதுவாக துறைமுகத்துக்கு ஒரு கப்பல் வருகிறதென்றால், 10 கடல் மைல் தூரத்திற்கு லோக்கல் கேப்டன் சென்று அந்த கப்பலை அழைத்து வருவார். அதே போன்று துறைமுகத்தில் இருந்து வெளியே சென்றாலும், லோக்கல் கேப்டன் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார். இதுதான் நடைமுறை.
ஆனால், ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் எண்ணெய் கொட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு கூறுவது என்பது தெரியவில்லை என்று அங்கு பணி புரியும் பெயர் சொல்ல விரும்பாதவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications