கொட்டிய ஆயிலை அகற்றுவது 2வது வேலைதான்.. துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சாரின் அலட்சியம்
கப்பல்கள் மோதிக்கொண்டதும் கப்பலில் உள்ளவர்களை காப்பற்றும் நோக்கத்தில் இருந்தோம் என்றும், கொட்டிய ஆயிலை அகற்றுவது இரண்டாவது வேலை என்றும் எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொடர்ந்து எண்ணெய் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றும் பணியில் முதலில் இருந்தோம் என்று எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொடங்கப்பட்டு 139 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி இருப்பது இதுதான் முதல் முறை. இந்த எண்ணெய் அகற்றும் பணியை 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. என்றாலும் இன்னும் முடிந்தபாடில்லை. வெறும் கைகளாலும், வாளிகளாலுமே எண்ணெய் அகற்றப்படுவதால் இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று துறைமுக தலைவரிடம் விசாரித்தால் பதில் ஒன்றும் இல்லை. மாறாக கப்பல் விபத்தில் மனிதர்களுக்கு எந்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்தினோம் என்றும், எண்ணெய் கொட்டியதை அகற்றுவது இரண்டாவது வேலைதான் என்றும் பாஸ்கர் ஆச்சார் கூறினார்.
பொதுவாக துறைமுகத்துக்கு ஒரு கப்பல் வருகிறதென்றால், 10 கடல் மைல் தூரத்திற்கு லோக்கல் கேப்டன் சென்று அந்த கப்பலை அழைத்து வருவார். அதே போன்று துறைமுகத்தில் இருந்து வெளியே சென்றாலும், லோக்கல் கேப்டன் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார். இதுதான் நடைமுறை.
ஆனால், ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் எண்ணெய் கொட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு கூறுவது என்பது தெரியவில்லை என்று அங்கு பணி புரியும் பெயர் சொல்ல விரும்பாதவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications