மதுரை அருகே கோயில் கிணற்றில் வீசப்பட்ட ரூ2.49 லட்சம் பழைய 500 ரூபாய் நோட்டுகள்
மதுரை அருகே கோயில் கிணற்றில் இருந்து ரூ2.49 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை: மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் உள்ள கோயில் கிணற்றில் இருந்து பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஆர்பிஐ கிளை அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை உரிய காரணத்தை கூறி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இந்திய குடிமகன்களுக்கு இல்லை எனவும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என கூறப்பட்டது. இதனால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாமலும், கைகளில் வைத்திருக்கவும் முடியாத சிலர் ஆங்காங்கே வீசி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை, மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இந்த கிராமத்தில் உள்ள திருமறைநாதர் சிவன் கோயில் கிணற்றில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கோயில் நிர்வாகி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ2.49 லட்சம் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications