மதுரை அருகே கோயில் கிணற்றில் வீசப்பட்ட ரூ2.49 லட்சம் பழைய 500 ரூபாய் நோட்டுகள்
மதுரை அருகே கோயில் கிணற்றில் இருந்து ரூ2.49 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை: மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் உள்ள கோயில் கிணற்றில் இருந்து பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஆர்பிஐ கிளை அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை உரிய காரணத்தை கூறி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இந்திய குடிமகன்களுக்கு இல்லை எனவும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என கூறப்பட்டது. இதனால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாமலும், கைகளில் வைத்திருக்கவும் முடியாத சிலர் ஆங்காங்கே வீசி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை, மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இந்த கிராமத்தில் உள்ள திருமறைநாதர் சிவன் கோயில் கிணற்றில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கோயில் நிர்வாகி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ2.49 லட்சம் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications