மதுரை அருகே கோயில் கிணற்றில் வீசப்பட்ட ரூ2.49 லட்சம் பழைய 500 ரூபாய் நோட்டுகள்
மதுரை அருகே கோயில் கிணற்றில் இருந்து ரூ2.49 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை: மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் உள்ள கோயில் கிணற்றில் இருந்து பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஆர்பிஐ கிளை அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை உரிய காரணத்தை கூறி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இந்திய குடிமகன்களுக்கு இல்லை எனவும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என கூறப்பட்டது. இதனால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாமலும், கைகளில் வைத்திருக்கவும் முடியாத சிலர் ஆங்காங்கே வீசி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை, மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இந்த கிராமத்தில் உள்ள திருமறைநாதர் சிவன் கோயில் கிணற்றில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கோயில் நிர்வாகி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ2.49 லட்சம் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications