அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி.. நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலி அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி: நெய்வேலி அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெய்வேலி வழியாக விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலியில் என்.எல்.சி மருத்துவமனை அருகே அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்பபோது பின்னால் வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் என்எல்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
விசாரணையில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்த முதியவர் செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 58 வயதான தங்கராசு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications