கணவன், மனைவி சண்டையை தடுக்கப் போய் உயிரை இழந்த மூதாட்டி
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தடுத்த மூதாட்டி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது பேத்தியின் கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், விவசாயி.
இவரது மனைவி உண்ணாமலை. இவரது மகள் ரமணியின் மகள் பவானி. இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் ஆலங்காயம் பகுதியில் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சில மாதங்களாக கோவிந்தராஜுக்கும், பவானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பவானியின் பாட்டி உண்ணாமலை இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், உண்ணாமலையை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த அவர் இறந்துவிட்டார்.ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications