Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவன்-மனைவிக்குள் சண்டை... சமாதானம் செய்ய வந்த முதியவர் கல்லால் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே கணவன் - மனைவி சண்டையை தீர்த்து வைக்க வந்த முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகிலுள்ள முட்டாஞ்செட்டியை சேர்ந்த விவசாயி குமரேசன் (41). இவரது மனைவி கலைச்செல்வி (38). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.

அந்தவகையில், நேற்றும் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது குமரேசனின் தோட்டத்திற்கு அருகில் வசித்து வந்த கோவிந்தகோனார் (70) என்பவர், அவர்களின் சண்டையை விலக்கி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதனால் குமரேசனுக்கும், கோவிந்தகோனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன், அருகில் கிடந்த கல்லை எடுத்து கோவிந்தகோனாரை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தகோனார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள், குமரேசனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+