'அம்மா' கூட்டத்திற்கு சென்ற என் கணவரைக் காணோம்: பெண் போலீசில் புகார்
சேலம்: சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்ற முதியவர் மாயமாகியுள்ளதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு வந்தவர்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறினர். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகிய இருவர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் உயிர் இழந்தனர்.
அவர்கள் இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக ஜெயலலிதா தெரிவித்தார். இந்நிலையில் மகுடஞ்சாவடி கூட்டத்திற்கு சென்ற நந்தகுமார்(65) என்பவர் மாயமாகியுள்ளார் என அவரது மனைவி பாப்பாத்தி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலம் கூட்டத்தில் 2 பேர் பலியாகியுள்ளன நிலையில் முதியவர் ஒருவர் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications