அலங்காநல்லூர், பாலமேட்டில் 14வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி !
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட சுற்று பகுதிகளில் 14வது நாளாக போக்குவரத்து துண்டிக்பட்டுள்ளாதல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்பை பொங்கலுக்கு முன்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் இரவு, பகலாக தொடர் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் வீதியில் திரண்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அலங்காநல்லூரில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் 8வது நாளில் திடீரென போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வாடிவாசல் பகுதி போர்க்களமாக மாறியது. போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். 41 பேரை கைது செய்தது.
பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதன் எதிரொலியாக மதுரை நகர் பகுதி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தற்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு நடந்து முடியும் வரை பாதுகாப்பு கெடுபிடி தொடரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 14 நாட்களாக அலங்காநல்லூருக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படாமல் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் மருத்துவமனை உள்ளிட்டவைக்கு சென்று வர முடியவில்லை எனவும், போக்குவரத்து சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications