தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications