For Daily Alerts
Just In
திடீர் கனமழை... செங்கல்பட்டில் இடி தாக்கி இளைஞர் பலி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையில் இளைஞர் ஒருவர் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
இதில், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 20 வயது இளைஞர் இடி தாக்கியதில் பரிதாபமாக, உடல் கருகி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
In Chengalpattu one person died in thunderstorm on yesterday rain.
Story first published: Thursday, September 29, 2016, 10:42 [IST]