தென்காசி அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - டிரைவர் பலி
தென்காசி அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். பேருந்து டிரைவர் படுகாயமடைந்தார்.
நெல்லை மாவட்டம் குத்துக்கல்வலசை அருகே கோயும்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், கடையநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிகளில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு தற்காலிக ஓட்டுனராக கடையநல்லூரை சேர்ந்த பூசை பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை பணி முடித்து விட்டு சொகுசு காரில் குற்றாலத்தில் இருந்து தனது சொந்த ஊர் கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.
குத்துகல்வலசை அருகே வரும் போது கோயமுத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பூசை பாண்டியன் வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் பூசை பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

தகவலறிந்த இலத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த பூசை பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications