For Daily Alerts
Just In
சென்னை கிஷ்கிந்தா தீம்பார்க்கில் ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் இன்று மாலை ராட்டினம் உடைந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ளது கிஷ்கிந்தா தீம்பார்க். இது நாட்டிலேயே சிறந்த முறையில் செயல்படும் பூங்காவிற்கான விருதினைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தீம்பார்க்கில் உள்ள ராட்டினம் ஒன்றை பழுது பார்க்கும் பணியில் ஊழியர் மணிகண்டன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது சோதனை ஓட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக ராட்டினம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
wheel broken at Kishkinta theme park and one died