செம குஷியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி் மாணவர்கள்!
சென்னை: கன மழை மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக நவம்பர் 9ம் தேதி முதல் அடுத்தடுத்து மூடப்பட்டு வந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படு்ம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுபடியும் மழை வந்து லீவு விட்டு விட்டது.
தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை கன மழை புரட்டிப் போட ஆரம்பித்தது. தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மூன்று மாவட்டங்களும், ஸ்தம்பி்த்துப் போய் விட்டன.
இனால் நவம்பர் 9ம் தேதி முதல் தொடர்ந்து பள்ளி கல்லூரி்களுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. நவம்பர் 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பள்ளிகளும், கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் மழை வந்து லீவு விட்டு விட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
நேற்று காலை முதலே அடடா நாளைக்கு ஸ்கூல் போகனுமா என்ற "சோகத்தில்" இருந்து வந்த அவர்களுக்கு இந்த லீவு திடீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.