For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.எல்.சி.யில் கொதிநீர் குழாய் வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் பலி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

One more dead in steam pipeline explosion at NLC
கடலூர்: என்.எல்.சி. அனல் மின் நிலைய கொதிநீர் குழாய் வெடிப்பு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் முதலாவது அனல் மின் நிலையத்தில் கொதிநீர் குழாய் கடந்த 20 ஆம் தேதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொறியாளர் செல்வராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவலிங்கம் என்பவர் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

English summary
One person died on Thursday in Chennai hospital, in the Neyveli Lignite Corporation (NLC) sustained burns after the steam pipeline exploded due to heavy pressure on May 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X