என்.எல்.சி.யில் கொதிநீர் குழாய் வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் பலி!
Subscribe to Oneindia Tamil

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் முதலாவது அனல் மின் நிலையத்தில் கொதிநீர் குழாய் கடந்த 20 ஆம் தேதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொறியாளர் செல்வராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவலிங்கம் என்பவர் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications