மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பலமுறை உல்லாசம்.. டீ மாஸ்டரை கொன்று கொடைக்கானல் மலையில் வீசிய கணவர்!

மதுரை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை, கணவரே கொன்று கொடைக்கானல் மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை கொலை செய்த கணவர்

    மதுரை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை, கணவரே கொன்று கொடைக்கானல் மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 38 வயதான மணிக்கண்டன் டீக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்.

    மணிகண்டனும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனும் நண்பர்கள் என தெரிகிறது. இந்நிலையில் சீனிவாசனின் மனைவிக்கும் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

    மனைவியுடன் உல்லாசம்

    மனைவியுடன் உல்லாசம்

    இதனால் சீனிவாசனின் மனைவியும் மணிக்கண்டனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விஷயம் அரசல்புரசலாக சீனிவாசனுக்கு தெரியவந்தது.

    கொடைக்கானலுக்கு அழைத்து

    கொடைக்கானலுக்கு அழைத்து

    இருவருக்குமான கள்ளத்தொடர்பை உறுதிசெய்த சீனிவாசன், மணிகண்டனை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, சீனிவாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை கடந்த 24ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர்.

    மணிகண்டன் கொலை

    மணிகண்டன் கொலை

    வட்டக்கானல் பகுதியில் அவர்கள் தங்கி இருந்து விட்டு இரவு விடுதியில் மது அருந்தினர். பின்னர் மணிகண்டனை கொலை செய்து பாம்பார்புரத்தில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தூக்கி வீசினர்.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    அதன் பிறகு அவர்கள் அனைவரும் மதுரைக்கு திரும்பி விட்டனர். இதனிடையே மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை காணாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் நண்பர்களே அழைத்துச் சென்று கொலை செய்து கொடைக்கானல் மலையில் இருந்து வீசியது தெரியவந்தது.

    2 நாட்களாக தேடல்

    2 நாட்களாக தேடல்

    இதனையடுத்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த 2 நாட்களாக கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை தேடி வந்தனர்.

    பாறை இடுக்கில் உடல்

    பாறை இடுக்கில் உடல்

    வட்டக்கானல் பகுதியில் 1,000 அடிக்கு கீழ் பாறைகளின் இடுக்கில் மணிகண்டன் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலை போலீசார் கைப்பற்றினர்.

    விஷ்ணுபிரியா கள்ளக்காதலன்

    விஷ்ணுபிரியா கள்ளக்காதலன்

    இந்த கொலை தொடர்பாக சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் பிரச்சினையில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் காதலன் பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு மலையில் வீசப்பட்டார்.

    சுற்றுலாப் பயணிகள் பீதி

    சுற்றுலாப் பயணிகள் பீதி

    அவரது உடல் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொடைக்கானல் நகர மக்களையும் சுற்றுலா பயணிகளையும் பீதியடைய வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+