கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது- வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த மனோஜ் சாமி என்பவரை கைது செய்துள்ள போலீசார் கோத்தகிரி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடாநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரான சயான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதெடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மனோஜ் சாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோத்தகிரி காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications