அதிமுக பிரமுகர் கொலை வழக்கு – புதுகை கோர்ட்டில் ஒருவர் சரண்
Subscribe to Oneindia Tamil
புதுகை: திருச்சி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் புதுக்கோட்டை கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலை வ.உசி நகரை சேரந்தவர் முனிஸ்வரன். இவர் அதிமுக உறுப்பினராகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்து வந்தார்.
கடந்த 2 ஆம் தேதி முனிஸ்வரன் மோட்டார் சைக்களில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் பிரகாஷ் என்பவரின் தம்பியான நாகலிங்கம் புதுக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications