சசிகலா உரையை விட ஸ்டாலின் உரைதான் பெஸ்ட்: ஒன் இந்தியா வாசகர்கள் 'தீர்ப்பு'
ஸ்டாலினின் பொதுக்குழு உரையை ஒன் இந்தியா வாசகர்கள் வரவேற்றுள்ளனர்; சசிகலா உரைக்கு மிக குறைவான எண்ணிக்கையில் ஆதரவு கிடைத்துள்ளது.
சென்னை: கட்சிகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உரையாற்றியதில் சசிகலா உரையைவிட ஸ்டாலின் உரைதான் பெஸ்ட் என 'தீர்ப்பளித்துள்ளார்கள்' நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.
அதிமுகவின் பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டு கடந்த டிசம்பர் 31-ந் தேதி 5 முறை அழுதபடியே சசிகலா உரையாற்றினார். இன்று திமுகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உருக்கமாக பொதுக்குழுவில் பேசினார்.
இந்த இருவரில் எவர் ஆற்றிய உரை பெஸ்ட்? என நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கேட்டிருந்தோம். இதோ நமது வாசகர்கள் அளித்த தீர்ப்பு:
சசிகலாவுக்கு 5.4%
மொத்தம் 19,092 பேர் பங்கேற்ற இக்கருத்து கணிப்பில் சசிகலா உரை பெஸ்ட் என 5.42% மட்டுமே கூறியுள்ளனர். அதாவது 1,035 பேர்தான் சசிகலா உரை பெஸ்ட் என்கின்றனர்.
ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு
ஸ்டாலின் உரைதான் பெஸ்ட் என 26.61% பேர் கூறியுள்ளனர். கருத்து கணிப்பில் பங்கேற்றோரில் 5,081 பேர் ஸ்டாலின் உரை பெஸ்ட் என்கின்றனர்.
இரண்டுமே நல்லா இல்லை
இருவரது உரையுமே நன்றாக இல்லை என 10.3% பேர் அதாவது 1,966 பேர் வாக்களித்துள்ளனர்.
இரண்டுமே சூப்பர்- நோ கமெண்ட்ஸ்
இரண்டுமே சூப்பர் என 108 பேர் அதாவது 0.57 கூறியுள்ளனர். அதேபோல் நோ கமெண்ட்ஸ் என 8.07% பேர் அதாவது 1,540 பேர் கூறியுள்ளனர்.
சீற்றமே அதிகம்
ஸ்டாலினுடன் சசியை ஒப்பிடுவதா? என சீறியிருப்பவர்கள்தான் மிக மிக அதிகம். மொத்தம் 49.04% பேர் ஸ்டாலினோடு சசியை ஒப்பிடுவதா? என சீறியுள்ளனர். அதாவது 9,362 பேர் இந்த ஆப்சனை தேர்ந்தெடுத்துள்ளனர்.