திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யப்போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் : ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டை நாளை முதல் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில்(www.tnhrce.gov.in) முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்கள் அனைத்தும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் தரிசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனவும் தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
பக்தர்களுக்கு கடற்கரையில் நீராடவும், நாழி கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கவும் அனுமதி இல்லை. மதிய அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications