ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக கறுப்புக்கொடி போராட்டம்.. கைது
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக விருதுநகரில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

விருதுநகர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக விருதுநகரில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆளுநர் மனுபெற செல்ல உள்ளார்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆளுநர் இன்னும் வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications