ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் கோரிக்கை
சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு சட்டசபை கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்புக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பின அமளிக்கிடையே பேசினார். அப்போது எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்த பின்பு வாக்கெடுப்பு நடத்தலாம் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்களின் குரலை பதிவு செய்தபின் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.