ஓ.பி.எஸ்.அண்ணே, காப்பாத்துங்கண்ணே.. கூவத்தூரிலிருந்து கதறும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
கூவத்தூரில் அடைபட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களை மீட்குமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் அடைபட்டுள்ள பல எம்.எல்.ஏக்கள் தங்களைப் பார்க்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேகமாக வர வேண்டும் என்றும், தங்களை மீட்க வேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நேற்று தனது செய்தியாளர் பேட்டியின்போது முதல்வரே கூட குறிப்பிட்டார். எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு அடைபட்டுள்ள பலரும் முதல்வர் வந்து தங்களை மீட்க வேண்டும் என்று கதறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கு அடைக்கப்பட்டுள்ள பலரும் தற்போது மாட்டிக் கொண்டு விட்டோமே என்று பயந்து பெரும் கவலையில் மூழ்கியுள்ளனராம். இங்கிருந்து எப்படியாவது மீண்டு வெளியேற வேண்டும் என்று துடித்துக்கொண்டுள்ளனராம். அந்த அளவுக்கு அங்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்களாம்.

முதல்வருக்கு தகவல்
அவர்களில் பலர் முதல்வருக்கு தகவல் அனுப்பியுள்ளனராம். எப்படியாவது எங்களை மீட்டுச் செல்லுங்கள். விரைவாக வாருங்கள். எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாருங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனராம்.

கூவத்தூருக்கு வரக் கோரிக்கை
முதல்வர் உடனடியாக கூவத்தூருக்கு வர வேண்டும். சிக்கித் தவிக்கும் எங்களை மீட்க வேண்டும் என்று இந்த எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனராம். எத்தனை பேர் இப்படிக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

போகத் துடிக்கும் முதல்வர்
இவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட முதல்வர் இதை புறம் தள்ள விரும்பவில்லையாம். அங்கு சென்று அவர்களை மீட்கத் துடிக்கிறாராம். நேற்றே அவர் கூவத்தூர் போவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் போகவில்லை.

தடுக்கும் போலீஸ்
முதல்வர் அங்கே போக வேண்டாம். நிலைமை சரியில்லை என்று அவருக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறி தடுத்து நிறுத்தியுள்ளனராம். நீங்க போகாதீங்க, தேவையில்லாத ரசாபாசம் உருவானால் அது உங்களுக்குத்தான் கெட்டப்பெயரை உருவாக்கும் என தடை போடுகிறதாம் போலீஸ் தரப்பு.
மொத்தத்தில் சிக்கித் தவிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எப்போது விடிவு காலம் என்று தெரியவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications