ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா, ரூ 22,500 கோடி நிவாரண நிதி - மோடியிடம் ஓபிஎஸ் கோரிக்கை
மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 22,500 கோடி நிவாரணம் தேவை என்று கோரிக்கை வைத்தார்.
கடந்த 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்த வர்தா புயலுக்கு சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. மூன்று மாவட்டகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர நிவாரண பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார் அவருடன் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், அரசு செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர் உடன் சென்றனர்.
அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில், அதிமுக எம்.பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாலையில் பிரதமர் இல்லத்துக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, முதல்வர் பன்னீர்செல்வம், தம்பிதுரை, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். வர்தா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை அளிக்கும்படி, பிரதமரிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் மிக முக்கிய கோரிக்கையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 184 பக்கங்கள் அடங்கிய மனுவை மோடியிடம், பன்னீர்செல்வம் வழங்கினார்.
முதல்வர் பிரதமரை சந்தித்த பிறகு ஓரிரு நாளில் மத்திய குழு தமிழகம் வருகிறது. அந்த குழு வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை பார்வையிடுகிறது. அந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவீன் வசிஷ்தா தலைமையில் விவசாய துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த குழு ஆய்வு செய்த பின்னர் அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கிறது. அதன் பிறகு மத்திய அரசு தமிழகத்திற்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அவரது மரணத்திற்கு பிறகு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications