For Daily Alerts
Just In
சென்னை அருகே கார் விபத்து... ஓ. பன்னீர் செல்வம் உறவினர்கள் மூவர் காயம்
சென்னை: சென்னையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிய முதல்வர் ஓ.பி.எஸ்சின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து பெரியகுளம் நோக்கி கார் ஒன்று சென்றது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரான தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சையா, அவரது மனைவி சாந்தி, மகள் சுஹாசினி ஆகியோர் பயணம் செய்தனர்.
டிரைவர் நாகராஜ் காரை ஓட்டிச் சென்றார்.இவர்கள் கார் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது.
இதில் முதல்வரின் உறவினர்கள் பிச்சையா, சாந்தி, சுஹாசினி மற்றும் டிரைவர் நாகராஜ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
English summary
Tamil Nadu CM O.Paneer selvam’s relatives hit by an accident and admitted in hospital.
Story first published: Wednesday, April 29, 2015, 19:16 [IST]