அதிமுகவில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் ஓபிஎஸ் என 67.30% பேர் கருத்து - புதிய தலைமுறை சர்வே
புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவில் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் தகுதியானவர் என தெரியவந்துள்ளது.
சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியானவர் என புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பு தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஆட்சியை சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களின் நாடிக்கணிப்பு என்ற பெயரில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்? என புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்? என கேட்கப்பட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி என 4.36% பேரும், ஓபிஎஸ் என 67.30% பேரும், பிறர் என 9.26% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 19.07% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் தமிழகத்தின் தற்போதைய அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் எனக் கருதுகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என 19.98% பேரும், இல்லை என 53.13% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 26.88% பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications