தினகரனை ஆதரித்து பிரசாரமா? கடும் எதிர்ப்பால் தலைதெறிக்க ஓடிய தம்பிதுரை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, கொருக்குபேட்டை அருகே ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த தம்பிதுரையின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், பெண்களும் வழிமறித்த
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த தம்பிதுரையின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், மக்களும் தாக்கியதால் அவர் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் 2 அணிகளும், திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர். எனினும் அதிமுகவின் இரு அணிகளுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த போதிலிருந்தே சசிகலா அணியினருக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
|
தீவிர பிரசாரம்
அதிமுக சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்விளக்கு சின்னத்திலும் அவர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொருக்குபேட்டையில் பிரசாரம்
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் நேற்று கொருக்குபேட்டையில் மீனாம்பாள் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுட்டிருந்தார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய காரில் வந்தார்.

தம்பிதுரைக்கு விரட்டியடிப்பு...
அப்போது அங்கிருந்த ஓபிஎஸ் வேட்பாளர்கள் தம்பிதுரையின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும், பொதுமக்களும் அவரது காரை மறித்து காரின் கண்ணாடியில் வேகமாக தாக்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், காரை விட்டு இறங்காமல் இருந்தார். பின்னர் எதிர்ப்பு பலமாக கிளம்பியதை தொடர்ந்து வந்த வழியே திரும்பி சென்றார். எனினும் விடாமல் அவரது காரை விரட்டி சென்றனர்.

வாக்குவாதம்
தகவலறிந்து ஆர்.கே. நகர் போலீஸார், அங்கு சென்று, ஓபிஎஸ் தரப்பினரை சமரசம் செய்தனர். இதனிடையே தம்பிதுரையை அந்த அணியினர் விரட்டியடித்த சம்பவம் குறித்து தகவலறிந்த தினகரன் தரப்பு சம்பவ இடம் வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர தாக்கி கொள்ளும் அளவுக்கு சென்றதால் போலீஸார் இரு பிரிவினரையும் அங்கிருந்து கலைய செய்தனர்.

போலீஸ் அனுமதி
கொருக்குப்பேட்டை நேரு நகரில், திமுக வேட்பாளரை ஆதரித்து, போலீஸாரின் அனுமதியுடன் நேற்று பிரசாரம் நடந்தது. ஆனால், அதிமுக எம்பி விஜயகுமார் தலைமையில் எவ்வித அனுமதியும் இல்லாமல், அதே பகுதியில் பிரசாரம் செய்தனர். இதனால், திமுகவினர், போலீஸில் புகார் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications