ஈபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் அணி ஆர்பாட்டம் ஆக.18க்கு மாற்றம் - வீடியோ
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பட்டத்தை சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த அதிமுக புரட்சி தலைவி அணி, விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளனர்.
ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல், குடிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என கூறி அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக முனொரு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆணி மற்றும் ஈபிஎஸ் அணி இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதனால் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது என்று கூறினர்.
Recommended Video

இந்நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரும் ஆகஸ்டு 18ஆம் தேதி சென்னையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் என அதிமுக புரட்சி தலைவி அம்மா அனியினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போராடுவது என்பது ஜெயலலிதாவுக்கு எதிராக போராடுவது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினரோ திட்டமிட்டபடி இந்தமுறை ஆர்ப்பாட்டம் நடக்கும் என்றும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பட்டத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாதகவும் தெரிவித்துள்ளனர்.
இது அதிமுகவின் பிளவுபட்ட அணிகள் ஒன்றிணைவதற்கு சாத்தியமில்லை என்று அதிமுக தொண்டர்களுக்கு சொல்லாமல் சொல்வது போல் உள்ளது.












Click it and Unblock the Notifications