For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் நம்பிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன. இத்தொகுதியில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளார்.

ops team will contest two leaves symbol for RK Nagar By-Poll

அதேபோல் ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் இத்தொகுதியில் போட்டியிட உள்ளன. அதிமுக வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில் இத்தொகுதியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆளும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர் என்றார்.

English summary
will contest two leaves symbol for RK Nagar By-Poll, said former chief minister o pannerselvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X