விரைவில் இவருக்குப் பதில் "அவர்"?
தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில்தான் என்கிறார் மைத்ரேயன்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழக சட்டசபையில் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில்தான் நடைபெறும் என ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே முத்தையால்பேட்டையில் செய்தியாளர்களிடம் மைத்ரேயன் கூறியதாவது:
சினிமா நடிகர்கள் பொதுவாழ்க்கையில் கருத்து கூற உரிமை உண்டு. இதை தடுக்கவோ மறுக்கவோ முடியாது.

முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகப் பெரிய குற்றம். இதற்காக டிஐஜி ரூபாவை இடம் மாற்றம் செய்ததை வைத்து விசாரணையின் போக்கு தெரிந்துவிடும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி தலைமையிலான அரசு இந்த கூட்டத் தொடருடன் முடிவுக்கு வந்துவிடும். தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.












Click it and Unblock the Notifications