நாங்க எல்லாம் காலில் மட்டும்மல்ல... கார் டயர்லயே விழுவோம்ல!: ஓபிஎஸ், நத்தம் வைத்தி...
சென்னை: காலில் விழும் கலாச்சாரம் தமிழக அரசியல்வாதிகளுக்கே உரியது. ஆனால் கார் டயரில் விழும் புதிய கலாச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார் முன்னாள் முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா 25.04.2016 திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் ஜெயலலிதாவிற்காக சாலையில் காந்திருந்தனர்.
கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க நின்று கொண்டிருந்த அமைச்சர்களைக் கண்ட உடன் காரை நிறுத்தச் சொன்னார் ஜெயலலிதா. அப்போது அருகில் சென்று மூவரும் வணங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டிருக்க அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென்று சாலையில் விழுந்து டயரை தொட்டு கும்பிட்டார்.
நடு ரோட்டில் வணங்கிய அமைச்சர்கள்
அமைச்சர்களின் இந்த செயலை யுடுயூப்பில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர். அமைச்சர்களின் செயலை சமூக வலைத்தளங்களில் பலர் கிண்டலடித்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
|
தவ வாழ்வை வணங்கும் அமைச்சர்கள்
மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்வதாக கூறும் அம்மாவை வணங்குவதாக கூறுகிறார் இந்த அமைச்சர்.
|
சிங்கம் இப்படி விழுந்திருச்சே
ஓ.பன்னீர் செல்வத்திற்காக இந்த நிலை என்று கேட்கிறார் இந்த வலைஞர்.
|
பிரச்சார வேன் முன்பு
கார் டயரை கும்பிட்டது நேற்று மட்டுமல்ல... கடந்த ஆண்டே பிரச்சாரத்திற்கு கிளம்பிய ஜெயலலிதாவை வேன் டயரை தொட்டு வணங்கி வழியனுப்பி வைத்தவர் ஒ.பன்னீர் செல்வம் இதுவும் வரலாற்றில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications